Skip to main content

NZ vs AFG: எளிதில் வென்ற நியூசிலாந்தின் அணுகுமுறையில் மாற்றம் என்ன?

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

What has changed in the attitude of easily won New Zealand

 

உலக கோப்பையின் 16 வது லீக் ஆட்டம் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கான்வே 18 ரன்களுக்கு முஜீப் பந்தில் அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யங், ரச்சின் இணை பொறுப்புடன் ஆடியது. ரச்சின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, யங் அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு வீழ்ந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப, 110/4 என்று தடுமாறியது. அடுத்து வந்த கேப்டன் லாதம், பிலிப்ஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேப்டனுக்கு உரிய பொறுப்புடன் ஆடிய லாதம் அரை சதம் கடந்தார். பிலிப்சும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த பிலிப்ஸ் 71 ரன்களிலும், லாதம் 68 ரன்களிலும் நவீன் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாப்மேனின் கடைசிக் கட்ட அதிரடியான 25 ரன்கள் உதவியுடன், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன், அஸ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ரஷித், முஜீப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11, ஜத்ரன் 14 என அடுத்தடுத்து அவுட் ஆக, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சான்ட்னர் சுழல் மற்றும் பெர்குசன் வேகம் என இருமுனை தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக் கட்டு போல் சரிந்தனர். அதிகபட்சமாக ரஹ்மத் 36 ரன்கள் மற்றும் ஒமர்சாய் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் நியூசி பந்து வீச்சில் நிலை குலைந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 149 ரன்கள் வித்தியாத்தில் படுதோல்வி அடைந்தது. நியூசி தரப்பில் சான்ட்னர், பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ரச்சின், ஹென்றி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது நியூசிலாந்து அணி வீரர் பிலிப்சுக்கு வழங்கப்பட்டது.

 

இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானம் சேசிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து முதலில் பந்து வீச தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் அதிக அனுபவம் பெற்ற சான்ட்னரை கணக்கில் கொள்ளாமல்  முதலில் பந்து வீசியதும், தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், சேப்பாக்கம் ஆடுகளத்தில் காற்றில் பந்தை திருப்ப வேண்டும். சான்ட்னர் கடைபிடித்த அந்த அணுகுமுறையை, ஆப்கன் வீரர்கள் செய்ய தவறி விட்டனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணி பெற்றுள்ள இந்த அபார வெற்றியின் மூலம், ரன் விகிதம் உயர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

- வெ.அருண்குமார் 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.