நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

newzealand won first odi match

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே20 மற்றும் 32 ரன்கள் எடுத்தனர். அதன்பின் வந்த கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 103 ரன்கள் குவித்தார். 348 என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய நியூஸிலாந்து 48.1 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக விளையாடி 109 ரன்கள் குவித்த ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.