Skip to main content

ஆறு ஆண்டுகால சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூஸிலாந்து...

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

 

newzealand won a bileteral series against india after six years

 

 

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில், நிக்கோலஸ் ஆகியோர் முறையே 79 மற்றும் 41 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.  பின்னர் வந்த ப்ளண்டேல் மற்றும் டெய்லர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.

274 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்துடனேயே ஆடியது. ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா மட்டுமே அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இதனையடுத்து இந்திய அணி 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்து. இதன் மூலம்  22 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2014 ஆண்டு தான் கடைசியாக இந்தியாவுடனான இருதரப்பு ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியிருந்தது. அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணி உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 

 

 

Next Story

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Born in New Zealand is New Year People flooded with happiness

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதனையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.