natarajan

"இது ஒரு மனிதன் எடுத்துவைத்தசிறியகாலடி. ஆனால் மனிதக் குலத்தின் பெரும் பாய்ச்சல்"நிலவில்கால் வைத்தபோது, நீல்ஆர்ம்ஸ்ட்ராங் கூறியவார்த்தைகள்இவை. நடராஜன்இன்று, இந்திய அணியில்இடம்பிடித்தது, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறிந்தவர்களுக்கு, இது நிலவில்கால்வைப்பதுபோன்ற சாதனைதான் என்பதுநன்றாகத் தெரியும். அதனால்தான், அவரின்ஒரு விக்கெட்டிற்குக்கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம்.

Advertisment

நடராஜன் இன்று, 'முதல்' விக்கெட்டைவீழ்த்தியபோது, 'கிரிக்பஸ்' என்ற மிகப் பிரபலமான கிரிக்கெட்இணையதளம், "சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது" எனவர்ணித்தது. இதற்கு முன்பு இந்திய அணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ்கள், சென்னை போன்ற பெரும் நகரங்களிலிருந்தே கிளம்பியிருக்கின்றன.முதல்முறையாகக் கிராமத்திலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் கிளம்பியதால்தான், இவ்வளவு கொண்டாட்டங்கள்.

மேலும், இதற்குமுன்பு கிளம்பியஎக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, இந்திய அணிக்குள் நுழையும்வரை ஒருஎக்ஸ்ட்ரா என்ஜின்துணையுண்டு. ஆனால், சின்னம்பட்டிஎக்ஸ்பிரஸிற்கு எப்போதும் ஒரே ஒரு என்ஜினின் துணைதான்.ஆம்! நடராஜனை தவிர இதற்கு முன்பு இந்திய அணிக்குள்நுழைந்தவர்களுக்கு, அதிகாரம், செல்வாக்கின் துணையிருந்தது. நடராஜனுக்கோ, அவரதுதிறமை மட்டும்தான்இன்றுவரைதுணையாகஇருந்துவருகிறது.

Advertisment

நடராஜனுக்குமுன்,அதிகாரம், பின்புலம்,செல்வாக்குடன் சென்றவர்கள்கூட சிறிதுகாலத்தில் கழட்டி விடப்பட்டிருக்கிறார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 80 -களில்நிலையான இடத்தை, தக்க வைத்திருந்தார். பிறகு லட்சுமிபதிபாலாஜி, நிலையான இடத்தை தக்கவைப்பார் எனநினைக்கும்போது, காயங்கள் அவரின்கிரிக்கெட் வாழ்க்கையைக் காயப்படுத்தியது. தற்போது, தினேஷ்கார்த்திக்மற்றும் வாஷிங்டன் சுந்தர்ஆகியோர்உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில், சடகோபன்ரமேஷ்,ஹேமங்பாதனிஆகியோர்இந்தியஅணிக்குஆடியதை, வர்ணனைக்கு நடுவே கூறும்பொழுது, "இதெல்லாம் நீ சொல்லித்தானேப்பு எனக்கேதெரியும்" என்பதேரசிகர்களின் மைண்ட்வாய்ஸாகாஇருக்கிறது.

முதல் தர கிரிக்கெட்டில் 50-க்குமேல் ஆவரேஜ் வைத்திருக்கும்பத்ரிநாத், இந்திய அணிக்காக ஆடியது வெறும் இரண்டேடெஸ்ட்டுகள்தான். இன்னொரு தமிழக வீரர் அபினவ்முகுந்த், இந்திய அணிக்கானதனதுகடைசி ஆட்டத்தில் 80 ரன்கள் அடித்துவிட்டு, வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்.இப்படித் தமிழகவீரர்களால் நுழையமுடியாத, நுழைந்தாலும்நிற்கமுடியாத இரும்புக் கோட்டையில்தான் திறமையை மட்டும் கொண்டுநடராஜன்,தன் தடம் பதித்திருக்கிறார்.

abd bowled

நடராஜன், டி.என்.பி.எல்லில் வீசியயார்க்கர்கள், அவருக்குஐ.பி.எல்வாய்ப்பைபெற்றுத்தந்தது. அவர், ஐ.பி.எல்லில் வீசியயார்க்கர்கள், குறிப்பாக அவர் ஏ.பி.டிவில்லியர்க்ஸ்க்கு வீசிய யார்க்கர்தான், அவருக்கு இந்திய அணியின் ராட்சச கதவுகளைத் திறந்தது. வருண் சக்கரவர்த்தி காயம்தான், நடராஜனுக்கு அதிர்ஷ்டமாக மாறி,அவருக்குஇந்தியஅணியில்இடம்பிடிக்கஉதவியது. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது "தைரியசாலிக்கே அதிர்ஷ்டம் துணை நிற்கும்"எனும்பழமொழியை.

ஏனெனில், யார்க்கர்பந்தைவீசுவது எளிதல்ல. கொஞ்சம், பந்து பேட்ஸ்மேனுக்கு முன்பு பிட்ச் ஆனாலும் அல்லது பிட்ச்சாகாமல் பேட்ஸ்மேனிடம் வந்தாலோ, பந்தைபவுண்டரியை நோக்கி கடாசிவிடுவார்கள். அதானால்தான் யார்க்கருக்கு பெயர்போன பும்ராவேசிலபோட்டிகளில் யார்க்கர்போட யோசிப்பார். டிவில்லியர்ஸோ யார்க்கர்பந்துகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்வைத்திருப்பவர். இந்த சிக்கல்களையெல்லம் மீறி, யார்க்கரில் டிவில்லியர்ஸின் மிடில்ஸ்டம்பைபறக்கவிட்ட தைரியம்தான், மற்ற நெட்பவுலர்களை தாண்டி நடராஜனை, இந்தியஅணியில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.

cnc

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரானபோட்டியில், இந்திய அணியின்மோசமான பந்துவீச்சுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை எனரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் எழுப்பிய கேள்வி, அதிர்ஷ்டத்தால் எழுந்ததல்ல. அவரின்திறமையால்எழுந்தது. அந்த திறமையேமொஹம்மதுஷமிபோன்ற ஒரு பெரும்வீரருக்குமாற்றாகஆடும் அணியில் இடம்பிடிக்கக் காரணம். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணியின்முக்கியவீரரையும், கடைசி நேரத்தில் வெற்றியைப் பறிப்பதுபோல் ஆடியஇன்னொரு வீரரையும்ஆட்டமிழக்கச் செய்து, அதிர்ஷ்டத்தால் கிடைத்த இடம் எனக் கூறியவர்களுக்கு அழுத்தமான பதிலையும், எந்த பின்புலமுமில்லாமல், செல்வாக்குமில்லாமல்இந்திய அணியில் நுழைந்ததமிழகவீரர் என்ற வரலாற்றை எழுதியிருக்கிறார் நடராஜன் .

ஆர்ம்ஸ்ட்ராங், நிலவில் கால் வைத்ததும், அதை மனிதக் குலத்தின் மாபெரும்பாய்ச்சல்எனஅவர் கூற காரணம், அவரின்அந்த ஒரு அடி, மனிதக் குலம்அறிவியலால் பல அடிகளை எடுத்துவைக்கும் என்பதால். நிலவில்இடத்தை விற்பதுமுதல், விண்வெளியில்ஸ்பெஸ்ஸ்டேஷன் அமைத்துத் தங்குவது எனஅவரின் வார்த்தைகள் உண்மையாகியிருக்கிறது.

அதேபோல்தான், நடராஜன்இந்தியஅணியில்பதித்தஇடமும். திறமையைமட்டும்கொண்டேஇந்தியாவிற்கு ஆடலாம்என்ற நம்பிக்கையைவிதைத்து. இன்னும், பல தமிழகஇளைஞர்களை இந்திய அணிக்கு ஆடவைக்கப்போகிறது. "ஏர் டெக்கானைஆரம்பிக்கப் போராடும்,நெடுமாறன்ராஜாங்கம்,"ஏர் ஒட்டுபவனும் இனி ஏரோபிளேன்ல போவான்" எனச் சொல்வதைப் போல, தனதுஊரில்இலவசகிரிக்கெட்பயிற்சி மையத்தைநடத்திவரும் நடராஜன், இனி மூலைமுடுக்கில்உள்ளதமிழர்களும், இந்திய அணியில்தடம்பதிப்பார்கள் எனச் சொல்லாமால் சொல்கிறார்.