இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதற்கான வாழ்த்து செய்தியில், "இன்று தொடங்கும் இந்திய அணியின் உலகக்கோப்பை பயணத்திற்காக ஒட்டுமொத்த அணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டையும், மேம்பட்ட விளையாட்டுதிறனையும் பாப்போம் என நான் நம்புகிறேன். விளையாட்டோடு இதயங்களையும் வென்றெடுங்கள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.