ADVERTISEMENT

7 ரன்களில் ஆல் அவுட்; 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எதிரணி!

10:49 PM Nov 21, 2019 | suthakar@nakkh…


மும்பையில் நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சில்ட்ரன் வெல்ஃபேர் பள்ளி அணியும், சுவாமி விவேகானந்தர் பன்னாட்டுப் பள்ளி அணியும் மோதியுள்ளன. ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விவேகானந்தா பள்ளி அணி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 761 ரன்கள் குவித்துள்ளது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இதையடுத்து விளையாடிய சில்ரன் வெல்ஃபேர் பள்ளி அணி மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் 6 ஓவர்களில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகியுள்ளனர். அந்த அணி மொத்தமாகப் பெற்ற 7 ரன்களுமே 6 வைடுகள் மற்றும் ஒரு பைய் ஆகியவற்றால் கிடைத்தாகும். இதன்மூலம் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT