Skip to main content

தோனியின் வலை பயிற்சியில் கீப்பிங் பயிற்சி இருக்குமா?

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

 

dd

 

எம்.எஸ்.தோனி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியா உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்று சமீபத்தில் கபில் தேவ் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக 37 வயதாகும் ஒரு வீரரின் உடல்தகுதியை இளம் வயது வீரர்களுடன் ஒப்பிடும்போது இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தோனியின் விஷயத்தில் அவர்தான் அதிலும் டாப். இன்றும் ஒரு இளம் வீரர் போல துடிப்புடனும், வேகமாக ஓடும் திறனுடனும் கலக்கி வருகிறார். 

 

1960-களுக்கு பிறகு ஃபரோக் இஞ்சினியர், கிரண் மோரே, சையத் கிர்மானி, நயன் மோங்கியா உள்ளிட்ட சிலர் மட்டுமே ரெகுலர் விக்கெட் கீப்பர்களாக 5 வருடங்களுக்கு மேல் அணியில் விளையாடி வந்தனர். அணிக்காக எதையும் தியாகம் செய்யும் டிராவிட் நல்ல விக்கெட் கீப்பர் கிடைக்காத காரணத்தால் 1999 முதல் 2004 வரை விக்கெட் கீப்பராகவும் பணியாற்றினார். சமீர் திஹே, விஜய் தாஹியா, தீப் தாஸ் குப்தா, அஜய் ரத்ரா, தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் படேல் உள்ளிட்ட பலர் உள்ளே வெளியே என மாறி மாறி அணியில் ஆடினாலும் யாருடைய விக்கெட் கீப்பிங்கும் மற்றும் பேட்டிங்கும் அணியின் தேவைக்கு ஏற்றவாறு இல்லை.

 

 

dd

 

நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வந்த இந்திய அணிக்கு உலகின் சிறந்த கேப்டன், பினிஷர், சிறந்த விக்கெட் கீப்பர் உள்ளிட்ட பல தகுதிகளுடன் ஒருவர் கிடைத்தார் என்றால் அது இந்தியாவிற்கு மிகவும் அதிர்ஷ்டமே. விக்கெட் கீப்பிங் மூலம் ஒரு போட்டியில் வெல்ல முடியும் என்று காட்டியவர் எம்.எஸ்.தோனி. இக்கட்டான சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் அசரும் நொடியில் ஸ்டம்பிங் செய்து அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் திகைக்க வைப்பார்.

 

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் விளையாடும் போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். 0.099 வினாடியில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் தோனி. இதற்கு முன்பு உலக சாதனையான 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்ததும் தோனிதான். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தோனி. 

 

d

 

 

தோனி இதற்காக தனியாக பயிற்சி எடுப்பாரா? எப்படி பயிற்சி எடுக்கிறார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதுவரை வலை பயிற்சியின் போது தோனி கீப்பிங் துறைக்காக தனியாக பயிற்சி செய்வதில்லை. வலைப்பயிற்சியின் போது பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என பயிற்சிகள் செய்வார். பயிற்சியின் போது கீப்பிங் செய்து பார்த்ததில்லை என்று வர்ணனையாளரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

 

இதுவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகள் என அனைத்திலும் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு முன்பு சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று கருதப்பட்டவர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பவுச்சர். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 147 டெஸ்ட் போட்டிகளில் 532 கேட்ச்கள் மற்றும்  23 ஸ்டம்பிங் செய்துள்ளார். 295 ஒருநாள் போட்டிகளில்  402 கேட்ச்கள், 22 ஸ்டம்பிங், 25 டி-20 போட்டிகளில் 18 கேட்ச்கள், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார். 

 

இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் 131 கேட்ச்கள், 20 ஸ்டம்பிங் செய்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் 383 கேட்ச்கள், 99 ஸ்டம்பிங் மற்றும் 56 டி-20 போட்டிகளில் 26 கேட்ச்கள், 19 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் 379 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங் செய்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் 417 கேட்ச்கள், 55 ஸ்டம்பிங் மற்றும் 13 டி-20 போட்டிகளில் 17 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

 

எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். 338 ஒருநாள் போட்டிகளில் 311 கேட்ச்கள், 119 ஸ்டம்பிங் மற்றும் 96 டி-20 போட்டிகளில் 56 கேட்ச்கள், 34 ஸ்டம்பிங் செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்து யாரும் எட்ட முடியாத இடத்தில் அசத்தும் தோனியின் பிராக்டிஸ் ரகசியம் வியப்பை ஏற்படுத்துகிறது. 

 

 

 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.