Skip to main content

என்னை கட்டாயப்படுத்தி நீக்கினர்- கண்ணீருடன் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் வெளியிட்ட வீடியோ...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான முகமது ஷஷாத் காயம் காரணமாக நாடு திரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

 

mohammed shazhad video about his fitness in worldcup series

 

 

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் நடந்த போட்டிகளில் விளையாடினார். அதில் 0 மற்றும் 7 ரன்களில் அவர் ஆட்டமிழந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக இக்ரம் அலி விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அவர் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அழுதபடியே கண்ணீருடன் பேசியுள்ள அவர், "எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நான் விளையாடுவதற்கு முழுத்தகுதியுடன் இருக்கிறேன். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்காமல் கட்டாயப்படுத்தி என்னை நாட்டுக்கு திரும்ப கூறியுள்ளனர்" என கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

 

Next Story

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டெல்லியில் லேசான நில அதிர்வு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Mild earthquake in Delhi

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று மதியம் 02.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.