ADVERTISEMENT

எனது தேசப்பற்று சந்தேகிக்கப்படுகிறது, இது எனது வாழ்வில் கருப்பு தினம்- மித்தாலி ராஜ்

10:57 AM Nov 30, 2018 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.சி.சி மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மித்தாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. மேலும் அவருக்கும், அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்குமான மோதல் முற்றி வருகிறது. உலகக்கோப்பை தொடர் பற்றி 10 பக்க அறிக்கையை பி.சி.சி.ஐ யிடம் பயிற்சியாளர் ரமேஷ் பவார் அளித்துள்ளார். இதில் 5 பக்ககங்களுக்கு மேல் மித்தாலி ராஜை குறை கூறும் விதமாகவே அமைந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மித்தாலி ராஜ் 'தனது தேசப்பற்று சந்தேகிக்கப்படுவதாகவும், இது தனது வாழ்வில் ஒரு கருப்பு தினம்' என்றும் கூறியுள்ளார். மேலும் அதில் அவர் அணிக்கான தனது 20 வருட கடின உழைப்பு, வியர்வை வீணாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT