Advertisment

கூடுதல் காவல் கண்காணிப்பாளராகும் மீராபாய் சானு!

mirabai chanu

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், சனிக்கிழமையன்று (24.07.2021) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்.

Advertisment

இப்போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை அவர் நிகழ்த்தினார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை புரிந்த மீராபாய் சானுவிற்கு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் மீராபாய் சானுவை, (விளையாட்டு பிரிவில்) கூடுதல் போலீஸ் சூப்பரிண்டண்டாக நியமிக்க மணிப்பூர் மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, மணிப்பூர் மாநில முதல்வர், மீராபாய் சானுவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

manipur mirabai chanu tokyo olympics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe