ADVERTISEMENT

"பழைய பள்ளிக்கூடம்" இந்திய அணியைச் சாடிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

01:23 PM Nov 28, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்னைப் பொறுத்தவரை தற்போதைய இந்திய ஒருநாள் அணி மிகவும் பழைய பள்ளிக்கூடம். வெறும் 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் போதுமான அளவில் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து வடிவ போட்டியிலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்துமென்று நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT