ADVERTISEMENT
ADVERTISEMENT
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்ற மெகா ஏலத்தையொட்டி அவரை பெங்களூர் அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
இந்தநிலையில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும், ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவருக்கும் வருகிற மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக மேக்ஸ்வெல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை மார்ச் 27 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments