ADVERTISEMENT

2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியில் மேரி கோம் வெற்றி...!

01:13 PM Dec 28, 2019 | Anonymous (not verified)

இந்திய குத்துச்சண்டை அரங்கின் அனுபவ வீராங்கனையான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம்(36), டோக்கியோ ஒலிம்பி்க் போட்டிக்காக 48 கி.கி பிரிவில் இருந்து 51 கி.கி எடைப்பிரிவிற்கு மாறினார். இந்த எடைப்பிரிவில் சாதித்து வரும் தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஸரீன், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிக்கு மேரி கோமை நேரடியாக அனுப்ப எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எதிர்ப்பு தெரிவித்ததால் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் டெல்லியில் வைத்து இருவருக்கும் போட்டி நடத்தியது. இதில் 9-1 என்ற புள்ளிகணக்கில் நிஹாத் ஸரீனை வீழ்த்தி மேரி கோம் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி பெற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT