பாராஒலிம்பிக்ஸ்; வெள்ளி வென்றார் மாரியப்பன்..வெண்கலமும் இந்தியாவிற்கே!

mariyappan thangavelu

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில்இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில்பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.

கடந்த பாரா ஒலிம்பிக்சில்மாரியப்பன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோட்டியில்இந்திய வீரர் சரத் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

mariyappan thangavelu paralympics
இதையும் படியுங்கள்
Subscribe