Skip to main content

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

mariyappan thangavelu selected for rajivgandhi khel ratna award

 

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு  இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. 

 

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது யார்யாருக்கு வழங்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2016 -ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

''கோரிக்கை வைத்துள்ளேன்...''-இந்தியா திரும்பிய மாரியப்பன் பேட்டி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

 '' I have a request ... '' - Interview with Mariappan who has returned to India!

 

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்பொழுது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை சந்தித்து வாழ்த்துபெற இருக்கிறார் மாரியப்பன். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன், ''இந்தமுறை தங்கம் மிஸ்ஸாகிவிட்டது. அடுத்தமுறை தங்கம் வென்றுவிடுவேன். தமிழ்நாடு முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன். க்ளாஸ் ஒன் வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு முன்பு ஒலிம்பிக்சில் கலந்துகொண்ட எல்லோருக்கும் க்ளாஸ் ஒன் வேலை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.

 

 

Next Story

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பரிசு அறிவித்த முதல்வர்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

2 crore prize for silver winner Mariappan! -Chief Minister's announcement!

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24-ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.

 

கடந்த பாரா ஒலிம்பிக்சில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோட்டியில் இந்திய வீரர் சரத் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டம் வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் 'மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

2 crore prize for silver winner Mariappan! -Chief Minister's announcement!

 

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பனுக்கு தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அதில், 'பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றுள்ள தமிழக நட்சத்திரம் மாரியப்பனுக்கு வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றியை காணும்போது மகிழ்ச்சியளிக்கிறது' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாயை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில், பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. எளிமையான வாழ்வையும் சவாலான உடல் நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார். இளைஞர்களிடம் ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விருதுகளை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.