ADVERTISEMENT

முன்தினம் கிரிக்கெட்.. மறுநாள் திருமணம்... தமிழ் நடிகையை மணந்த இந்திய கிரிக்கெட் வீரர்...

12:01 PM Dec 03, 2019 | kirubahar@nakk…

30 வயதான இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே, தமிழ் திரைப்பட நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெங்களூருவை சேர்ந்த மனிஷ் பாண்டே இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரும், உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்த அஷ்ரிதா ஷெட்டியும், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இவர்களது திருமண அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அறிவித்தபடி அவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது.

அதற்கு முந்தைய நாள் இரவு தமிழகத்துக்கு எதிரான முஷ்டாக் அலி கோப்பையில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடிய மனிஷ் பாண்டே அந்த ஆட்டத்தில் தனது அணியை வெற்றி பெறவும் வைத்தார். பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் நாள் இரவு சாம்பியன் பட்டம், மறுநாள் காலை திருமணம் என ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார் மனிஷ் பாண்டே.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT