Skip to main content

இந்தியாவுக்கு கோபப்படாத தோனி சென்னைக்காக கோபப்பட்டுள்ளார்... கிரிக்கெட்டை விட முக்கியமானவர்கள் யாரும் இல்லை...

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

“விளையாடுவதற்காக சம்பளம் உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வெற்றி பெறுவதற்குத் தான் சம்பளம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.” என்று எங்களது அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தார்கள் என பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தார்.
 

dhoni

 

 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் தான் பந்தை சேதப்படுத்துதல் மாதிரியான தவறுகளுக்கு வித்திடுகிறது. இது போன்ற சர்ச்சைகளுக்கு இந்திய அணி வீரர்கள் பெரும்பாலும் அப்பாற்பட்டவர்கள். ஆனால் அஸ்வின் செய்த மன்கட் அவுட், நல்ல செயல்களுக்கு மட்டுமே உதாரணமாக இருந்துவந்த கூல் கேப்டன் தோனி முதன்முறையாக களத்தில் விதிகளை மீறி மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டது போன்றவை கிரிக்கெட்டின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது.
 

கிரிக்கெட்டில் பக்கா ஜென்டில்மேன் என்ற பெயர் பெற்றவர் தோனி. பல நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்களையும், கிரிக்கெட்டை மேம்படுத்தும் செயல்களையும் மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் செய்தவர் தோனி. உணர்ச்சிவசப்பட்டு சில நிமிடங்கள் தோனி களத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு கரும்புள்ளி.
 

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் பல தவறான முடிவுகளை நடுவர்கள்  வழங்கியுள்ளனர். இதனால் ஆட்டத்தின் முடிவுகள் கூட மாறியுள்ளது. இதுபோல பல முறை சர்வேதேச போட்டிகளின்போதும் சந்தித்தவர் தோனி. அப்போதெல்லாம் கோபப்படாத தோனி, ஐபிஎல் போட்டிகளின்போது கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அவர் மீதுள்ளது என்பதையே காட்டுகிறது.
 

“வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஐபிஎல்-லில் இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்; அல்லது மூட்டையைக்கட்டு; அடுத்த வருடம் வாய்ப்பு இருக்காது.” என்ற சூழ்நிலை இங்கு உள்ளது என முன்னாள் குஜராத் லைன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்திருந்தார். அந்த கூற்றுகள் முற்றிலும் உண்மை என்பதையே தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ பால் பற்றி ஜடேஜா மற்றும் சண்ட்னர் இருவரும் நடுவரிடம் விவாதிக்கும் போது தோனி மைதானத்திற்குள் வந்தது தவறான முன்னுதாரணம். இது நடுவரை அவமதிப்பதாக கருதப்படும். நடுவர்கள் முடிவுகளை கேள்விக் கேட்ட தோனியை ஒன்று அல்லது இரண்டு ஆட்டத்தில் தடை செய்யப்பட வேண்டும். இந்திய அணிக்கு இந்த மாதிரியான செயலை செய்திருந்தால் மகிழ்ச்சியடைவேன். இந்திய அணிக்கு விளையாடும் போது தோனியை கோபமாக பார்த்ததில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
 

dh

 

 

இது ஒன்றும் கிராமத்தில் விளையாடும் கிரிக்கெட் அல்ல. அல்லது 10 வயது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. தோனி ஒரு சில நேரங்களில் ஒரு வீரர் என்பதையே மறந்துவிடுகிறார். தோனிஅதிகாரி அல்ல, தோனி ஒரு வீரர் மட்டுமே, தோனி அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் கூறியுள்ளார்.
 

ஐபிஎல்லில் அணிகளின் உரிமையாளர்களிடமிருந்து அதிகளவில் அழுத்தங்கள்வரக்கூடும் என எனக்குத் தெரியும். ஆனால் அஸ்வின் மற்றும் தோனி ஆகியோரின் செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றமடைந்தேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்க் வாஹ் கூறியுள்ளார்.
 

இந்த ஐபிஎல் தொடரில் நடுவர் செயல்பாடுமிகவும் ஏமாற்றமாக உள்ளது. நோ பால் என்று கூறப்பட்ட நிலையில்அந்த முடிவு மாற்றப்படுகிறது. எதிரணியின் கேப்டன் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் மீண்டும் மைதானத்திற்குள் வருவது முறையற்ற செயல். தோனி தவறான முன்னுதாரணத்தை கேப்டன்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 

நோ பால் என்ற முடிவை திரும்பப் பெறுவதோஅல்லது மைதானத்திற்குள் நடுவர் தரப்படும்எந்த முடிவையும் திரும்பப் பெறுவதற்கு நடுவருக்கு மட்டுமேஉரிமை உள்ளது. ஆனால் தோனி அதை விமர்சித்த முறைதான் ஆச்சர்யமாக உள்ளது என முன்னாள் இந்திய வீரர் ஹேமங்க் பதானி தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.