
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதின. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 185 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.