Advertisment

அதிரடி முடிவெடுத்த மெஸ்ஸி...!

messi

அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியின் கடந்த கால வெற்றிகளில்மெஸ்ஸியின் பங்கு மிகமுக்கியமானது. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான தொடரில் பார்சிலோனா அணி, பெய்ரன் முனிச் அணியுடன் மோதி 2-8 என்ற கோல்கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இந்ததோல்வியை அடுத்து பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதற்கான அதிரடி முடிவை மெஸ்ஸி எடுத்துள்ளார். இது குறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திற்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெஸ்ஸியின் இந்த முடிவானது பார்சிலோனா அணி ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது.

Advertisment

பார்சிலோனா அணியிலிருந்து விலகி, மெஸ்ஸி மான்செஸ்டர்சிட்டி கிளப் அணியைத் தேர்வு செய்ய இருக்கிறார் என உறுதிப்படுத்தப்படாததகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

messi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe