Skip to main content

கோலி, ரோகித்தை நெருங்கும் பாகிஸ்தான் இளம்வீரர் பாபர் அசாம்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

 Babar Azam

 

ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. ஜிம்பாவே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 837 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களான விராட் கோலி, 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோகித் ஷர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

 

ரோகித் ஷர்மாவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்க 18 புள்ளிகளும், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க 34 புள்ளிகள் மட்டுமே பாபர் அசாமிற்குத் தேவையென்பதால், இனி அவரவர் இடங்களைத் தக்க வைக்க இவ்வீரர்களிடையே கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Babar Azam steps down as captain

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.

 

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் போட்டிகளில் களம் இறங்கி 4 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு கூட பாகிஸ்தான் அணி முன்னேற முடியவில்லை. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. பாகிஸ்தான் அணிக்கு புதிதாக வரும் கேப்டனுக்கு பேட்ஸ்மேனாக எனது முழு அர்ப்பணிப்பையும் வழங்குவேன் எனவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பு வகித்து வந்த பாபர் அசாம் ஒரு நாள் போட்டிகளில் 42 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 26 வெற்றிகளும், 14 தோல்விகளும் பெற்றுள்ளார். ஒரு ஆட்டம் டையிலும், ஒரு ஆட்டம் முடிவில்லாமலும் போனது. டெஸ்ட் போட்டிகளில் 20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 10 வெற்றிகளும், 6 தோல்விகளும் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 71 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 42 வெற்றிகளும், 22 தோல்விகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பாக். அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கிவீசப்பட்ட சர்ஃபராஸ்... புதிய கேப்டன்கள் பெயர் அறிவிப்பு...

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 

sarfaraz ahmed sacked as pakistan captain

 

 

உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக அந்நாட்டு ரசிகர்களால் கூறப்பட்டது சர்ஃபராஸ் அகமதின் கேப்டன்சி தான். உலகக்கோப்பை தோல்வியின் விளைவாக பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளராக்கப்பட்டார். இந்த நிலையில்  டெஸ்ட், டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அசார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் ஆசம் டி-20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.