Skip to main content

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மும்பை அணி வீரர்!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

Krunal Pandya

 

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபில் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் தொடருக்குப் பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அமீரகத்தில் இருந்தே ஆஸ்திரேலிய புறப்பட்டுச் சென்றதையடுத்து, பிற வீரர்கள் தங்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

 

அந்தவகையில், நேற்று இந்தியா திரும்பிய மும்பை அணி வீரரான குர்னால் பாண்ட்யா மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது, அவரிடம் கணக்கில் காட்டப்படாத சில விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

தற்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து  குர்னால் பாண்ட்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

இந்திய வீரருக்கு கரோனா - இலங்கையுடனான இரண்டாவது டி20 ஒத்திவைப்பு!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

team india

 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில், தற்போது 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இன்று (27.07.2021) இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெற இருந்தது.

 

இந்தநிலையில், இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இன்று நடைபெறுவதாக இருந்த இருபது ஓவர் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

 

ஒருவேளை இரு அணிகளைச் சேர்ந்த வேறு யாருக்கும் கரோனா உறுதியாகவில்லை என்றால், இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Next Story

அபார ஆட்டத்திற்குப் பிறகு கண்ணீர் சிந்திய பாண்டியா!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

krunal pandya

 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான் சிறப்பாக ஆடி 98 ரன்களும், விராட் கோலி அரைசதமும் அடித்து ஆட்டமிழந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், க்ருனால் பாண்டியாவும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய க்ருனால் பாண்டியா, 31 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா இருவரின் ஆட்டத்தாலும் இந்திய அணி 317 ரன்களை குவித்தது.

 

இந்திய இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேசுவதற்கு வந்த க்ருனால் பாண்டியா, உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் தவித்தார். கண்ணீர் சிந்திய அவர், ஓரளவிற்கு அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "இதனை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்" எனத் தெரிவித்தார். க்ருனால் பாண்டியாவின் தந்தை, இந்த வருடத்தின் தொடக்கத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.