மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் ரிஷப் பந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, "ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான நேரத்தை வழங்குவது நம் அனைவரது கடமை என நினைக்கிறேன். அவர் எதாவது தவறு செய்தால், தோனி தோனி என்று குரல் எழுப்பி அவரை கிண்டல் செய்ய வேண்டாம். நமது நாட்டுக்காக விளையாடும் அவருக்கு நமது முழு ஆதரவை நாம் தர வேண்டும்" என தெரிவித்தார்.