தற்போது நடந்த வரும் ஐபிஎல் 14 ஆவது சீசனில் நேற்று ஜெய்ப்பூரில் ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆர்.சி.பி அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து. 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி தொடர்ந்து 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

Advertisment

kohli pressmeet about continuous loss of rcb team in ipl 2019

இந்நிலையில் நேற்று இந்த ஆட்டம் முடிந்த பிறகு ஆர்.சி.பி அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தொடர்ந்து 4 தோல்விகள் மூலம் நாங்கள் மோசமான நிலைக்கு சென்றுவிட்டோம். ஆனால், அடுத்து வரும் போட்டிகளில் எங்களைச் சுற்றி இருக்கும் காரணிகளை மாற்றி மீண்டும் வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மும்பையில் நடந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால்,இங்கு விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில், இன்னும் நாங்கள் நிறைய முன்னேற்றம் காணவேண்டியுள்ளது என தோன்றுகிறது. ஏற்கனவே நாங்கள் கடந்து வந்த போட்டிகளை கணக்கிட்டு எதிர்வரும் போட்டிகளில் அணிக்கு சரியாகப் பொருந்தக்கூடிய 11 வீரர்களைத் தேர்வு செய்வோம்" என கூறினார்.