Advertisment

எங்கள் பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் -கொல்கத்தா அணி வீரர் பேச்சு!

csk players

எங்கள் பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என கொல்கத்தா அணி வீரர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றிகள், 2 தோல்விகள் கண்டுள்ளது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 3 தோல்விகளைகண்டுள்ளது. கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் போராடி தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்து வந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றது. அதே வெற்றியை இன்றைய போட்டியிலும் தொடரும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், கொல்கத்தா அணி வீரர் திரிபாதி இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "நீண்ட நாட்களாக இங்கு பயிற்சி எடுத்து வருகிறோம். இந்த மைதானத்தில் எங்களுக்கு சில அனுபவம் கிடைத்துள்ளது. எவ்வளவு துல்லியமாக பந்து வீச வேண்டும் என்று எங்கள் வீரர்களுக்கு தெரியும். கடந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இன்று போட்டி நடைபெறும் மைதானம் கொஞ்சம் பெரியது. எங்களது பவுலர்கள் சென்னை அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்" எனக் கூறினார்.

CSK KKR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe