Advertisment

அவரிடம் நிலையான ஆட்டம் இல்லை... இந்திய வீரர் மீது குற்றச்சாட்டு வைத்த பீட்டர்சன்!

Kevin Pietersen

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய இளம் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 5 வெற்றிகள், 1 தோல்வி கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரின் கவனத்தைப் பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த மூத்த வீரரான பிரைன் லாரா,ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து வெகுவாகப் பாராட்டினார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மூத்த வீரரும், வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன்,ரிஷப் பண்ட் குறித்து மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

அதில் அவர், "ரிஷப் பண்ட் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கிறது. அவரிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். அவரிடமிருந்து நிலையான ஒரு ஆட்டத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் அவரை எப்படிப் பார்த்தேனோ, அதே மாதிரியான ஆட்டத்தைதான் இன்றும் பார்க்கிறேன்" எனக் கூறினார்.

IPL rishabh pant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe