ADVERTISEMENT

கேதர் ஜாதவ் படைத்த வித்தியாசமான சாதனை!

10:26 AM Oct 09, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்வரிசையில் களமிறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடாமல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சென்னை அணி ரசிகர்களால் கருதப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்தான மீம்ஸ்கள் வைரலாகின.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ், 4 இன்னிங்ஸில் களமிறங்கி 59 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 58 ரன்கள் ஆகும். அவர் எதிர்கொண்ட 59 பந்துகளில் இதுவரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது. அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் கூட அடிக்காதவர்கள் பட்டியலில் கேதர் ஜாதவ் முதலிடம் பிடித்துள்ளார். பஞ்சாப் அணியைச் சேர்ந்த மேக்ஸ்வல், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கனே வில்லியம்சன் ஆகியோரும் இந்தப்பட்டியலில் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT