இந்த மாத இறுதியில் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் பிசிசிஐ -யால் அறிவிக்கப்பட்டது.

Advertisment

kedar jadhav mar ruled out of indian worldcup squad due to injury

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில் தோனி, கேதார் ஜாதவ், ஜடேஜா என மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில் கேதார் ஜாதாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த ஜாதவ் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு நாளை எக்ஸ்-ரே எடுக்கப்பட உள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் தரும் அறிக்கையை வைத்தே ஜாதவ் உலகக்கோப்பையில் விளையாடுவாரா, இல்லையா என தெரிய வரும்.

Advertisment

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், சிறந்த பகுதிநேர பந்துவீச்சாளருமான இவர் உலகக்கோப்பையில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பையில் ஜாதவ் விளையாடுவர் இல்லையா என்பது நாளை அவரது மருத்துவ பரிசோதனை முடிந்ததே தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.