Skip to main content

கோலி பேசலாம்... ஆனால் நாங்க பேசக்கூடாதா?

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

இந்திய கேப்டன் விராத் கோலியின் செயல்பாடுகள் களத்தில் முதிர்ச்சியற்ற தன்மையில் இருக்கிறது என தென் ஆப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கூறியுள்ளார்.

 

kagiso rabada about kohli and ipl incident

 

 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 5-ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் மோதவுள்ளன. மற்ற அணிகள் ஒன்று, இரண்டு போட்டிகள் விளையாடிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

“நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின் போது எனது பந்தில் கோலி அடித்த பவுண்டரிக்காக என் மீது மோதி விட்டு ஒரு வார்த்தையை கூறிச் சென்றார். அதே பதிலை அவருக்கு நான் திருப்பிக்கூறும் போது, அவர் கோபமடைந்து விட்டார்” என்று ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலியுடன் விளையாடிய அனுபவம் பற்றி ரபாடா தெரிவித்துள்ளார்.

“கோலி களத்தில் விளையாடும்பொழுது யார் மீதேனும் கோபப்படுவார். ஆனால் எதிரேயுள்ள நபர் பதிலுக்கு அதே கோபத்தினை வெளிப்படுத்தினால் அதனை கோலியால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவரை புரிந்து கொள்வது கடினம். அவர் மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரது அணுகுமுறை அவர் முதிர்ச்சியற்றவர் என எடுத்து காட்டுகிறது” என்று ரபாடா கூறியுள்ளார்.  

ஐபிஎல் தொடரில் ரபாடாவின் 13 பந்துகளை சந்தித்த கோலி ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்கள் எடுத்து ஒரு முறை அவுட் ஆகியுள்ளார். இதுவரை இருவரும் ஒருநாள் போட்டிகளில் 12 முறை சந்தித்துள்ளனர். இதில் 2 முறை கோலியின் விக்கெட்டை எடுத்துள்ளார் ரபாடா. 

 

kagiso rabada about kohli and ipl incident

 

 

5 டெஸ்ட் போட்டிகளில் இரு முறை கோலியை வீழ்த்தியுள்ளார் ரபாடா. 2017-18-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரபாடாவின் 147 பந்துகளை சந்தித்து 93 ரன்கள் விளாசினார் கோலி. சர்வதேச டி20 போட்டிகளில் இருமுறை சந்தித்து கோலி ஒரு முறை கூட ரபாடாவிடம் அவுட் ஆகவில்லை. 

இதுவரை கோலி தென் ஆப்பிரிக்கா அணியுடன் 26 போட்டிகளில் விளையாடி 1269 ரன்கள், பேட்டிங் சராசரி 66.79. இதில் 5 முறை ஆட்டமிழக்கவில்லை. இதில் இரு முறை மட்டுமே ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆகியுள்ளார். மற்ற போட்டிகளில் ஃபாஸ்ட் பவுலர்களிடம் வீழ்ந்தார். கடைசியாக 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 558 ரன்கள் விளாசினார் கோலி. பேட்டிங் சராசரி 186 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரு முறை ஃபாஸ்ட் பவுலிங்கில் அவுட் ஆனார். 3 முறை இந்த தொடரில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பவுலிங் மூலம் பல சர்ச்சைகளுக்கு பிறகு இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த ஆர்ச்சர் கோலியை பற்றிக்கூறும் போது “ஐபிஎல் தொடரில் லெக் ஸ்பின்னரிடம் அவுட் ஆகிக்கொண்டே இருந்தார். அதனால் அவரை அவுட் செய்வதற்க்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உலகக்கோப்பை தொடரில் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். விராத் கோலி, டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆபத்தான பேட்ஸ்மேன்கள். இவர்கள் ஆட்டத்தின் போக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடியவர்கள் என்று ஆர்ச்சர் கூறியுள்ளார்.

“ஆர்ச்சர் என் விக்கெட்டை கைப்பற்றுவேன் என கூறியது பற்றி கவலைப்பட மாட்டேன். இது போன்ற கருத்துகளை நான் கண்டு கொள்வதில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பங்கு வகிப்பார்” என ஆர்ச்சர் பற்றி விராத் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் அதன் சொந்த மண்ணில் 2018-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்து பேட்டிங் சராசரி 64 வைத்திருந்தார் கோலி. இந்த தொடரில் 3 முறையும் ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆகினார் கோலி. 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் 5 போட்டிகளில் 258 ரன்கள் எடுத்தார். பேட்டிங் சராசரி 129. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இரண்டு முறை ஃபாஸ்ட் பவுலிங்கில் அவுட் ஆனார் கோலி. 3 முறை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.