Skip to main content

“கே.எல்.ராகுல் உள்ளே.. இவர்கள் வெளியேவா?” – ட்விட்டரில் ரசிகர்கள் ஆதங்கம்

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர், நியூசிலாந்தில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்த சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெறவில்லை. ஒருநாள் தொடரிலிருந்து ரிஷாப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார்.  இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

 

ra

 

 

டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படும் சுரேஷ் ரெய்னா, சமீபகாலமாக டி20  போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டு வருகிறார். கடந்த வருடங்களில் பார்ம் அவுட் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சையத் முஸ்தாக் அலி கோப்பையில் சதம் அடித்து மீண்டும் தன்னை நிரூபித்தார். இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு நடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த வருடத்தில் 13 டி20 போட்டிகளில் 298 ரன்கள் எடுத்து 143.96 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். 

ரிஷாப் பண்ட் தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடித்தாலும், ரிஷாப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட போதும் பேட்டிங்கில் எதிர்பார்த்த  அளவிற்கு பங்களிக்கவில்லை. இதுவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணியுடனான டி20 போட்டிகளில் மணீஷ் பாண்டே ஒரு போட்டியில்கூட இடம்பெறவில்லை. நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரில் இந்தியா ஏ அணிக்கு விளையாடிய இவர் ஒரு சதம் உட்பட 158 ரன்கள், 52.67 சராசரி கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த ஆண்டு 13 டி20 போட்டிகளில் 299 ரன்ககள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியுடன் 2015-2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்து, அணியை வெற்றி பெற வைத்தது மட்டுமல்லாது தொடரை வென்று சாதனை படைக்க உதவினார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மணீஷ் பாண்டே இந்திய அணியில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறார். 

இந்தியா ஏ அணியின் கேப்டன்  ஸ்ரேயஸ் ஐயர் வரவிருக்கும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து ஏ அணியுடன் சிறப்பாக விளையாடியுள்ளார். நியூசிலாந்து ஏ அணியுடன் ஒரு சதம் உட்பட 317 ரன்கள் எடுத்தார். இதுவரை 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 42 சராசரி, 210 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். தினேஷ் கார்த்திக், அம்பதி ராய்டு, கேதர் ஜாதவ் ஆகியோர் இவர்களின் இடத்தை ஒருநாள் போட்டிகளில் நிரப்பியுள்ளனர்.  

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கே.எல். ராகுல் ட்வீட்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

KL Rahul Twit was injured and underwent surgery

 

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

 

தொடர்ந்து, காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்தார். அதேபோல் இந்தாண்டு நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 

இந்நிலையில் கே.எல்.ராகுல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிகிச்சை அனைத்தும் சீராக நடந்ததற்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வேகமாக குணமடைந்து வருவதாகவும் மீண்டும் களத்தில் இறங்கி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது தானும் வேகமாக காயத்தில் இருந்து மீண்டு வருவேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.