ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாட உள்ளது.

jhonty rhodes distinguish between dhoni and kohlis captaincy

Advertisment

Advertisment

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு பின்பு கோலியின் கேப்டன்ஷிப் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், "தோனி எந்த ஒரு சூழலிலும் யோசித்து நிதானமாக முடிவெடுத்து ஆட கூடியவர். மனக்கட்டுபாட்டுடன் வீரர்களின் தகுதிகேற்ப சரியான முடிவெடுக்க கூடியவர். போட்டியில் நுணுக்கமாக முடிவுகளை சரியாக எடுக்கக்கூடிய திறமை வாய்ந்த வீரர். ஆனால் விராட் கோலி போட்டியில் மிகவும் ஆக்ரேஷமாக காணப்படுவார். மேலும் போட்டியில் தனது முத்திரையை அவர் திணிக்க பார்ப்பார்" என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.