Skip to main content

பஞ்சாப் அணியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... ஜப்பான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும், பிரிட்டானியா பிஸ்கேட், பாம்பே டையிங் நிறுவனங்களின் உரிமையாளருமான நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

japan court sentencd ness wadia for two years over drug possession case

 

 

விடுமுறையை கொண்டாட ஜப்பான் சென்ற வாடியா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 25 கிராம் போதைப்பொருளை தந்து பாக்கெட்டுக்குள் மறைத்து அவர் எடுத்து சென்றுள்ளார். இது மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதனை தனது சொந்த தேவைக்காகவே எடுத்து வந்துள்ளேன் வேறு எந்த நோக்கமும் இல்லை என அவர் அந்நாட்டு காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்காத அவர்கள் வாடியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டானியா பிஸ்கேட், பாம்பே டையிங், கோ ஏர் விமான நிறுவனம், பஞ்சாப் அணி என கிட்டத்தட்ட 13 பில்லியன் டாலர்கள் சொத்து உடைய மிகப்பெரிய தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 107 ரன்கள் இலக்கு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

ipl cricket match for today chennai super kings vs kings eleven punjab team

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (16/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது. 

 

ipl cricket match for today chennai super kings vs kings eleven punjab team

 

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 47, ரிச்சர்ட்சன் 15, கிறிஸ் கெயில் 10, தீபக் ஹூடா 10 ரன்களை எடுத்தனர். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

அதைத் தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

 

 

Next Story

ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

Published on 12/04/2021 | Edited on 13/04/2021

 

ipl match cricket for today kings eleven punjab

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (12/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 91, தீபக் ஹூடா 64, கெயில் 40 ரன்களைச் சேர்த்தனர்.

 

அதைத் தொடர்ந்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்ஜூ சாம்சன் 119, பட்லர் 25 ரன்களை எடுத்தார்.