/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jaddu-im.jpg)
இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, இந்திய அணியின்கே.எல். ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ஷிகர் தவான் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன்விராட்கோலியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 23 ரன்களிலும், மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும்சிறிது நேரத்தில் ஆட்டமிழந்ததால், இந்தியஅணி 140 ரன்களைதொடுமா எனசந்தேகம் எழுந்தது. ஆனால், ரவீந்திரஜடேஜாஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை பந்தாடினர். கடைசிக்கட்டத்தில் அவரின்அதிரடி ஆட்டத்தால் இந்தியஅணி, 7 விக்கெட்இழப்பிற்கு 161 ரன்கள்குவித்து, ஆஸ்திரேலியா அணிக்கு162 ரன்களைஇலக்காகநிர்ணயித்துள்ளது. ஜடேஜா23 பந்துகளில் 44 ரன்கள்குவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)