Advertisment

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 'win' நயம் செய்து விடல்" : ஹர்பஜன் சிங் ட்வீட்!

ஐபில் சீசன் -12 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்ற நிலையில் , மற்றொரு அணியை தீர்மானிக்கும் போட்டி நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் டெல்லி அணி மற்றும் சென்னை அணி மோதின.அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. இதை சந்தோசமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 'win'நயம் செய்து விடல்! என்றும் சறுக்குனாலும் யானை யானை தான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான், மொத்ததுல நாங்க சிங்கம்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும்.

Advertisment

HARBAJAN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மீண்டும் ஒரு ஐபில் சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை சிஎஸ்கே என சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் தமிழில் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஐபில் இறுதிப் போட்டியில் மும்பை அணியும் , சென்னை அணியும் மே -12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைப்பெற உள்ளது. எனினும் இதற்கு மும்பையுடன் சென்னை அணி மோதிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ள நிலையில் , மும்பை அணியை வீழ்த்தி சரித்திர சாதனையை படைக்குமா சென்னை அணி என சென்னை அணியின் ரசிகர்கள் எதிர்நோக்கிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

HARBHAJAN SINGH IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe