Skip to main content

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

KL



இந்த ஊரடங்கு காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நிகழ்ச்சிகள், கூட்டங்கள் முதலியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதல் முறை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


 

Next Story

ஐபிஎல் சூதாட்டத்தால் பலியான கோவை இளைஞர்!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Coimbatore youth passed away by IPL gambling


ஐபிஎஸ் சூதாட்டத்தில் பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம். 35 வயதான இவர், கார் டீலர் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சபாநாயகம் கடந்த 14 ஆம் தேதியன்று கோவைக்கு தன்னுடைய தொழில் சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது, தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சபாநாயகத்தின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.

 

அதன்பிறகு சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையின் பாத்ரூமில் சபாநாயகம் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சபாநாயகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, சபாநாயகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் சபாநாயகத்தின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

 

அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சபாநாயகம், அதில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்பதும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த தற்கொலை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

First win for Chennai Super Kings!

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் (Dr DY Patil Sports Academy) இன்று (12/04/2022) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. 

 

பின்னர், 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.