தள்ளிப்போகும் ஐபிஎல் மெகா ஏலம்?

IPL AUCTION

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டன. இதனையடுத்து, மெகா ஏலத்தில் எந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் ஐபிஎல் ஏலத்தை பிப்ரவரி மாதத்தின் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில், பெங்களூரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் இந்தியாவில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால், மெகா ஏலம் நடைபெறும் தேதியையும், இடத்தையும் மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்தால், மொத்த ஐபிஎல் போட்டிகளையும் மும்பை மற்றும் புனேவிலோ அல்லது குஜராத்தின் அகமதாபாத், பரோடா, ராஜ்கோட் ஆகிய நகரங்களிலோ நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக விரைவில் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாகவும்பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL
இதையும் படியுங்கள்
Subscribe