ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக பூரான் 32, கே.எல்.ராகுல் 27, கெயில் 20 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 35, விஜய் சங்கர் 26 ரன்கள் எடுத்தனர்.