Skip to main content

2014ல் நடந்த அந்த மேஜிக்.. மும்பைக்கு திரும்ப நடக்குமா? - ஐ.பி.எல். போட்டி #34

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

என்னதான் நடப்பு சாம்பியனாக இருந்தாலும், இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அதுவும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் தந்த சென்னை அணிக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு நடப்பு சாம்பியனான மும்பைக்கும் அது அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவர் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, அதைத் தொடர்ந்து வரிசையாக கடைசி ஓவர் வரை வந்து தோற்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தது. தற்போதைய நிலையில், அந்த அணி 8 போட்டிகளில் களமிறங்கி வெறும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Rohit

 

 

ஏப்ரல் 26ஆம் தேதி 133 ரன்களை சேஷிங் செய்யமுடியாமல் டிஃபண்டிங் எக்ஸ்பெர்ட்ஸ் என அழைக்கப்படும் ஐதராபாத் அணியிடம் தோற்ற பஞ்சாப் அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் களமிறங்காமல் இருந்ததால், புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு அந்த அணி சென்றிருக்கும் நிலையில், மீண்டும் அதிரடி ஆட்டங்களைக் காட்ட அந்த அணி முனைப்பு காட்டலாம். என்னதான் பலமான அணியாக இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ராகுலைத் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. பஞ்சாப் அணியின் பலவீனமே மிடில் ஆர்டர்தான். இன்று அதில் சில மாற்றங்களை அஸ்வின் ஏற்படுத்தலாம். பந்துவீச்சிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

 

kxip

 

 

இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. மிகவும் சிறிய மைதானம் இது என்பதால், சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம். இந்த மைதானத்தில் வைத்துதான் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்தார். 2017ஆம் ஆண்டு மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் வெறும் 15.3 ஓவர்களில் 199 ரன்களை மும்பை அணி சேஷிங் செய்த வரலாறு கண்முன்னே வந்து போகிறது. இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இருபது போட்டிகளில் தலா 10 போட்டிகளில் வெற்றிபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

rohit

 

2014ஆம் ஆண்டு மும்பை அணி தற்போதைப் போலவே, எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. ஆனால், எஞ்சியிருந்த போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக ஆடி, ப்ளே ஆஃபிற்கு முன்பாக 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து, பின்னர் கோப்பையையும் கைப்பற்றி மிரட்டியது. டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது உண்மையென்றால், மேலே சொன்னதுகூட அப்படியே நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு மும்பை அணி தயாராக வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய போட்டியில் ஜெயித்தாக வேண்டும். இல்லையென்றால், கோப்பைக் கனவுகளை மூட்டை கட்டிவிட்டு, அடுத்த அணிகளை கீழே இறக்கும் வேலைகளில் இறங்க வேண்டியதுதான்.

 

 

Next Story

"இருவரும் மோதி பார்க்கலாமா என தோனியிடம் சவால் விட்டேன்" - பிராவோ பகிர்ந்த சுவாரசிய தகவல்....

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

2018 ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கும், தனக்கும் இடையே நடைபெற்ற ஓட்டப்போட்டிக்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் பிராவோ.

 

story behind dhoni and bravo running race

 

இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிராவோ, "2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு போட்டியின்போது, தோனி என்னை வயதானவர், வயதானவர் எனக்கூறி சீண்டிக்கொண்டே இருந்தார். மேலும், எனக்கு வயதாகிவிட்டதால்தான் வேகமாக ஓடமுடியவில்லை எனக்கூறி கிண்டல் செய்தார். அப்போது நான் அவரிடம், இருவரும் ஆடுகளத்தில் ஓடிப் பார்க்கலாமா, யார் வேகமாக ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்றேன்.
 

 nakkheeran app



முதலில் அதற்கு மறுத்த தோனி பின்னர் ஒப்புக்கொண்டார். ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு சவாலை வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் போட்டியின் நடுவே இந்த சவாலால் யாராவது ஒருவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இறுதிச்சுற்றுக்குப் பிறகு ஓட்டப் பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம் என்றேன். அப்படிதான் அந்த போட்டி நடைபெற்றது. அது மிகவும் கடுமையான போட்டி. நூலிழையில் அவர் என்னைத் தோற்கடித்தார். அவர் விரைவாக ஓடினார்" என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சன்ரைசர்ஸின் மாஸ் பவுலிங்கா? டெல்லியின் அசத்தல் பேட்டிங்கா?

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் மோதவுள்ளன. தரவரிசை பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ள டெல்லி அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியுடன் வாழ்வா சாவா போட்டியில் விளையாடவுள்ளது. 

 

delhi capitals versus sunrisers hyderabad eliminator match

 

 

இந்த ஆண்டு இளம் கேப்டன், பெரும்பாலான இளம் வீரர்களுடன் களமிறங்கிய டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. தற்போது விளையாடும் அணிகளில் இதுவரை இறுதிப்போட்டியை சந்திக்காத ஒரே அணி டெல்லி அணி மட்டுமே. டெல்லி அணி நாக் அவுட் போட்டிகளில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை மாற்ற தயாராகி வருகிறது டெல்லி.  

டெல்லி அணிக்கு லீக் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரபாடா இல்லாமல் விளையாடுவது சற்று பலவீனமாக அமையும். 12 போட்டிகளில் 25 விக்கெட் எடுத்து இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

அதே போல ஹைதராபாத் அணியில் அதிரடி ஒப்பனிங் பேட்ஸ்மேன்களான வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு பலவீனமாக இருக்கும். மார்டின் குப்தில், வில்லியம்சன் ஆகியோர் அதிக பொறுப்புடன் விளையாடிய வேண்டிய நிலையில் ஹைதராபாத் அணி உள்ளது. மனிஷ் பாண்டே கடந்த சில போட்டிகளில் 1-வது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். பவுலிங்கில் புவனேஷ், ரசித் ஆகியோர் கலக்கி வருகின்றனர். 

ஷிகர் தவானை டிரேடிங் விண்டோ மூலம் 3 வீரர்களை கொடுத்து எடுத்தது டெல்லி அணி. அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. இந்த தொடரில் 486 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு சிறப்பான ஒப்பனிங் தந்துள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். இந்த தொடரில் 442 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 14 போட்டிகளில் 401 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு பலமாக இருப்பது டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் தான். 

பவுலிங்கில் அமித் மிஸ்ரா எகானமி ரேட் 6.33. மற்ற டெல்லி ஸ்பின்னர்களின் எகானமி ரேட் 9-க்கும் அதிகமாக உள்ளது. அக்சர் படேல் (9.35), டிவத்தியா (9.00), லேமிச்சேன் (9.13). டெல்லி அணி ஸ்பின் பவுலிங்கில் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது.  

 

delhi capitals versus sunrisers hyderabad eliminator match

 

 

இந்த ஆண்டு டெல்லி அணியின் பெயர், ஜெர்சி, பயிற்சியாளர்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புது அணியாக களமிறங்கி 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு பயிற்சியாளர்கள் துறையில் உள்ள கங்குலி மற்றும் பாண்டிங் ஆகியோரின் அனுபவம் இளம் வீரர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. 

ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்சர் படேல் என டெல்லி அணியின் முக்கிய இளம்வீரர்கள் டிராவிட்டிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 9 முறை ஹைதராபாத் அணியும், 5 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது.  விசாகப்பட்டினத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மோதிய நிலையில் அதில் டெல்லி அணி வென்றுள்ளது.

முதல் பேட்டிங் செய்த அணி 22 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 34 முறையும் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 156, இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 148. பிட்சின் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் இந்த மைதானத்தில் அதிக அளவில் ஸ்கோர் குவிக்க இயலாது. ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக ரன்கள் எடுத்தது 223/3 (சென்னை vs ஹைதராபாத்), குறைந்தபட்ச ரன்கள் 80/10 (டெல்லி vs ஹைதராபாத்), அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்தது 217/7 (ராஜஸ்தான் vs டெக்கான் சார்ஜர்ஸ்), குறைந்தபட்ச ரன்களை டிஃபண்ட் செய்தது 129/8 (மும்பை vs புனே).

டெல்லி கேபிடல்ஸ்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் /கீமோ பால், ட்ரென்ட் போல்ட்/லேமிச்சேன், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மார்டின் குப்தில், சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான்/அபிஷேக் சர்மா, முகம்மது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா/ பசில் தம்பே.