Advertisment

ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை! - ஐ.பி.எல். போட்டி #15

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

Advertisment

இதுவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 4 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு போட்டிகளிலும் களமிறங்கி, தலா இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இருந்தாலும், புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணியே முன்னேற்ற நிலையில் இருக்கிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறுமானால், புள்ளிப்பட்டியலில் தடாலென முன்னுக்கு வரலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைப் பொருத்தவரை சிறந்த பேட்ஸ்மென்கள் இருந்தாலும், தரமான பவுலர்கள் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. ஆல்ரவுண்டர் நிதீஷ் ரானா, சுனில் நரேன் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பது பலம். ராஜஸ்தான் அணியின் பலமே அதன் பவுலிங்தான். டெல்லி அணியுடனான 7 ஓவர் போட்டியே அதற்கு சான்று. சொந்த மைதானத்தில் ஆடுவதால் ராஜஸ்தான் அணிக்கே கூடுதல் பலம். வெற்றிவாய்ப்பைப் பெறும் அணி எது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ipl 2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe