ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36, ஸ்டோக்ஸ் 30, பராக் 20 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 83, விஜய்சங்கர் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கும் பட்சத்தில்,பிளே ஆப் கனவு தகர்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.