Skip to main content

ஐ.பி.எல். கிரிக்கெட்: வீரர்கள் விறுவிறு ஏலம்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

ipl cricket players


14- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று (18/02/2021) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில், கடும் போட்டிக்கு இடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் மேக்ஸ்வெல்லை ரூபாய் 14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்மித்தை ரூபாய் 2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஆரோன் ஃபின்ச்சை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலியை ரூபாய் 7 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூபாய் 4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வங்கதேச அணியின் கிரிக்கெட் வீரர் சாஹிப்- அல் ஹசனை ரூபாய் 3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் வீரர் டேவிட் மலானை ரூபாய் 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸை ரூபாய் 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மோரிஸ். கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ரூபாய் 10 கோடிக்கு கிறிஸ் மோரிஸை வாங்கியிருந்தது பெங்களூர் அணி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை ரூபாய் 14 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் நாதன் கூல்டர் நைலை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பியூஸ் சாவ்லாவை ரூபாய் 2.4 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை அணி. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் உமேஷ் யாதவை ரூபாய் 1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கை, இம்முறை நடந்த ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

 

வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.