IPL

2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகசாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாகஇரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே, ஏற்கனவே போட்டியில் விளையாடும் ஐபிஎல் அணிகளுக்கு, நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும்வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், தக்கவைக்கப்படும் நான்கு வீரர்களில்அதிகபட்சம் மூன்று பேர் இந்தியர்களாகஇருக்கலாம் அல்லது அதிகபட்சம் இருவர் வெளிநாட்டினராக இருக்கலாம் என்றுவீரர்களைத் தக்கவைக்க விதிமுறை வகுக்கப்பட்டது.

Advertisment

இந்தச்சூழலில், ஐபிஎல் அணிகள் வீரர்களைத் தக்கவைப்பதற்கான கால அவகாசம் இன்று (30.11.2021) மதியம் 12 மணியோடுமுடிவடைகிறது. இந்தநிலையில்ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின்பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, மேக்ஸ்வெல்

டெல்லி கேபிட்டல்ஸ்: ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இந்த அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின்முழு பட்டியல், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.