Skip to main content

ரஹானே விக்கெட்டை சீக்கிரம் தூக்கணும்! - ஃப்ளெமிங் : ஐ.பி.எல். போட்டி #43 

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது.

 

csk

 

இந்த இரண்டு அணிகளும் ஏப்ரல் 20ஆம் தேதி முதன்முதலாக மோதியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறப்பாக ஆடி வெற்றியும் பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 106 ரன்கள் அடித்து, இந்த சீசனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 

 

அதன்பிறகு, நிறையவே போட்டிகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டு அணிகளும் வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. சென்னை அணிக்கு இன்னமும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் போதும். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு அப்படியல்ல. இனிவரும் எல்லா போட்டிகளிலுமே வெற்றிபெற்றாக வேண்டும்.

 

rr

 

சீசன் தொடங்கியபோது இருந்ததைப் போல அல்லாமல், ராஜஸ்தான் அணியில் நிறையவே மாறியிருக்கிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் பட்லர் அரைசதம் விளாசி இருக்கிறார். ஜோஃப்ரா ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்கள் அந்த அணியின் வேகத்தைக் கூட்ட, நியூசிலாந்து அணியின் இஷ் சோதியும் பார்ட்டியில் இணைந்திருக்கிறார். ஆனால், இன்னமும் ஒரு சிலர் மட்டுமே போட்டி மொத்தத்தையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருந்து அந்த அணி மீளவில்லை.

 

சென்னை அணிக்கு அப்படியல்ல.. அந்த அணி களமிறங்கிய பல போட்டிகளில் வெவ்வேறு வீரர்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். டெத் ஓவர் என்ற பெரிய குறையையும் அந்த அணி களைந்திருக்கிறது. டேவிட் வில்லி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

fleming

 

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பின்க் ஜெர்சி அணிந்து களமிறங்குகிறது. போட்டியில் வெற்றிபெறுவது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங், ‘ரஹானே மிகச்சிறந்த வீரர். நிதானமாக தொடங்கினாலும் சட்டென போக்கை மாற்றிக்கொண்டு சுலபமாக ரன்குவிப்பில் ஈடுபடக் கூடியவர். ஒருவேளை அவர் தனது விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால், மிடில் ஆர்டரில் இறங்கும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் போன்ற வீரர்களால் ஸ்கோர்போர்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழலாம். அதனால், ரஹானே விக்கெட்டை முதலிலேயே தூக்குவதுதான் எங்கள் திட்டம். ஒரு அணியின் கேப்டனை உடனடியாக தூக்கிவிட்டால் எல்லாமே நமக்கு சாதகமானதாகி விடும்தானே’ என தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs GT: சேப்பாக்கத்தை சிலிர்க்க வைத்த சிவம் துபே!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl live score update csk vs gt shivam dube show

ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.