Skip to main content

மூன்றாவது டெஸ்ட் போட்டி; வலுவான நிலையில் இந்திய அணி

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

 

xfgn

 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. அதன் பின் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 6  ஓவர்கள் முடிவில் 8 ரன்கள் எடுத்திருந்தபொழுது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய புஜாரா 106 ரங்களும், கோலி 82, மாயங்க் அகர்வால் 76 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.