பெர்த் மைதானத்தில் சொதப்பும் இந்திய அணி

ind

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. நான்காம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஷமி 6 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்தியஅணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியஅணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரஹானே 30 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் ரிஷப் பந்த் 9 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.

cricket indvsaus virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe