Skip to main content

200+ வீரர்கள், 50 கோடிகள்... ஐபிஎல் போலவே அசத்திய கபடி ஏலம்...

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்த படியாக ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டாக கபடி இருந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் தொடரை 435 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டாக உள்ளது ப்ரோ கபடி லீக். 
 

pro kabbadi

 

 

ப்ரோ கபடி 7-வது சீசன் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும்  வெளிநாட்டு வீரர்கள் உட்பட 200+ வீரர்களை12 அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்தனர். அதிகபட்சமாக மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் 1.45 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
 

“நான் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவன்.என் தந்தை ஒரு விவசாயி. என்னுடைய சூழ்நிலையில் இருந்து வந்து ஒரு கபடி வீரராக ஆவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்திருந்தேன். என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய 100% ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என சித்தார்த் தேசாய் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் கோடி கணக்கில் வீரர்களை ஏலத்தில் எடுத்தது இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ரோ கபடி லீக் தொடரில் ஒரு சில குறிப்பிட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு புனேரி பல்தான்ஸ் அணி நிடின் தோமரை 1.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டு அதே அணி அவரை 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் 1 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே வீரர் இவர் மட்டுமே.
 

கடந்த ஆண்டு அதிகபட்ச விலைக்கு (1.51 கோடி) வாங்கப்பட்ட மோனு கோயட்டை, இந்த ஆண்டு 93 லட்சத்திற்கு யூ பி யோதாஸ் அணி வாங்கியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த முகமது எஸ்மெயில் நபிபக் 77.75 லட்சத்திற்கு பெங்கால் வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். வழக்கம் போலவே வெளிநாட்டு வீரர்களில் ஈரான் அணி வீரர்களே ஏலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.
 

தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மன்ஜீத் சில்லர், விக்டர் ஒபிரோ ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆண்டுக்கான தமிழ் தலைவாஸ் அணிக்கு ரைடர்கள் ராகுல்சவுத்ரி, சபீர் பாபு, ஆனந்த், யஷ்வந்த் பிஷ்னோய், அஜித் குமார் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. ஆல்ரவுண்டர்கள் ரான் சிங், வினீத் சர்மா ஆகியோரையும் டிபெண்டர்கள் மொஹித் சில்லர், அஜீத், அபிஷேக், மிலாத் ஷேய்பக், பார்த்திபன், ஹிமன்சு, ஹெமன்ட் சாஹன் ஆகியோரையும் ஏலத்தில் வாங்கியது.
 

கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணிக்கு ரைடிங்கில் அஜய் தாகூர் தவிர வேறு எந்த வீரரும் பங்களிக்காததால் சென்ற வருடம் பலவீனமான ரைடிங் யூனிட்டாக இருந்தது தமிழ் தலைவாஸ் அணியின் ரைடிங். ப்ரோ கபடி வரலாற்றின் நம்பர் 1 ரைடர் ராகுல் சவுத்ரிஇந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்திருப்பது இந்திய அணியின் கேப்டன் அஜய் தாகூர்க்குபலத்தை கூட்டும்.
 

pro kabbadi

 

 

டாப் 5 இந்திய வீரர்கள்:
சித்தார்த் தேசாய் (1.45 கோடி- தெலுங்கு  டைட்டன்ஸ்)
நிடின் தோமர் (1.20 கோடி- புனேரி பல்தான்ஸ்)
ராகுல் சவுத்ரி (94  லட்சம்- தமிழ் தலைவாஸ்)
மோனு கோயட் (93 லட்சம்- யூ பி யோதாஸ்)
சந்தீப் நர்வால் (89 லட்சம்- யு மும்பா)
 

டாப் 5 வெளிநாட்டு வீரர்கள்:
முகம்மது எஸ்மெயில் நபிபக் - ஈரான் (77.75 லட்சம்- பெங்கால்வாரியர்ஸ்)
அபோசர் மோகஜர்மயானி - ஈரான் (75 லட்சம்- தெலுங்கு  டைட்டன்ஸ்)
ஜங் குன் லீ - கொரியா(40 லட்சம் -பாட்னா பைரேட்ஸ்)
முகம்மது எஸ்மெயில் மாக்சுது - ஈரான் (35லட்சம் - பாட்னா பைரேட்ஸ்)
டாங் ஜியோன் லீ– கொரியா (25 லட்சம் - யு மும்பா)

டாப் 5 ரைடர்கள்:

சித்தார்த் தேசாய் (1.45 கோடி - தெலுங்கு  டைட்டன்ஸ்)
நிடின் தோமர் (1.20 கோடி - புனேரி பல்தான்ஸ்)
ராகுல் சவுத்ரி (94லட்சம் - தமிழ் தலைவாஸ்)
மோனு கோயட் (93 லட்சம் - யூ பி யோதாஸ்)
பிரசாந்த் கே. ராய் (77 லட்சம் -ஹரியானா ஸ்டீலர்ஸ்)
 

டாப் 5 டிபெண்டர்கள்:

மகேந்தர் சிங் (80 லட்சம் - பெங்களூரு புல்ஸ்)
சுரேந்தர் நாடா (77 லட்சம் - பாட்னா பைரேட்ஸ்)
பரேஷ் பன்ஷ்வால் (75 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)
ரவீந்தர் பஹால் (61 லட்சம்- தபாங் டில்லி)
விஷால் பரத்வாஜ் (60 லட்சம் - தெலுங்கு டைட்டன்ஸ்)
 

டாப் 5 ஆல்ரவுண்டர்கள்:

சந்தீப் நர்வால் (89 லட்சம் - யு மும்பா)
ரான் சிங் (55 லட்சம் - தமிழ் தலைவாஸ்)
விஜய் (41 லட்சம் - தபாங் டில்லி)
வினோத் குமார் (26 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)
ரோஹித் குலியா (25 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)

 

 

Next Story

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி; கபடியில் ஹரியானா அணி வெற்றி

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
khelo India Games; Haryana team wins in Kabaddi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதே சமயம் சென்னையில் உள்ள நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக நாளை (19.01.2024) தனி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். மேலும் 5:45 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்று (18.01.2024) கேலோ இந்தியா விளையாட்டின் ஒரு பகுதியாக கபடி போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இரு பிரிவுகளில் நடைபெற்ற மகளிர் பிரிவு கபடி போட்டியில் 41-20 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 

Next Story

'கபடி வீரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்'- அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

 'Insurance for Kabaddi Players; Good news will come'- Minister Meiyanathan's speech

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக, மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அறந்தாங்கியில் கிரிக்கெட் போட்டியும், கீரமங்கலத்தில் மகளிருக்கான கபடிப் போட்டியும் நடத்த ஏற்பாடாகி போட்டிகளை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

திட்டமிட்டபடி அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடந்த கிரிக்கெட் இறுதிப் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக ஓய்விற்காக ஒரு விடுதியில் தங்கியவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஓய்வு தேவை என கூறியதால் கீரமங்கலத்தில் நடக்கும் மகளிர் கபடி போட்டிக்கு செல்ல முடியாமல் மாலையில் மதுரை வழியாக சென்னை திரும்பினார். இந்நிலையில் கீரமங்கலம் மகளிர் கபடிப்  போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன்  பேசுகையில், ''6 கோடுகளை மட்டும் போட்டு விளையாடும் கபடி, ஒரு மூங்கில் குச்சியுடன் விளையாடும் சிலம்பம் போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் இன்று உலக அளவில் போய்விட்டது. சிலம்ப வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கியது இப்போதைய முதலமைச்சர் தான். அதேபோல கபடி வீரர்களுக்கு பாதுகாப்பிற்காக காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடமும், விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில் முதலமைச்சர் நல்ல செய்தியை சொல்வார். இதுவரை கட்டாந்தரையில் கபடி விளையாடிய வீரர்களுக்காக பாதிப்புகளை குறைக்க மேட் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.