Skip to main content

இந்தியாவிற்கான இறுதி வாய்ப்பு? - இலங்கையை எதிர்பார்க்கும் நிலை ஏற்படுமா? 

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

India's last chance? Will Sri Lanka be expected?

 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் நடந்தது. 

 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன்கில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சிலும் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன் கில் 21 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஹுன்னாமன் 5 விக்கெட்களையும் நாதன் லியன் 3 விக்கெட்களையும் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆஸி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கவாஜா 60 ரன்களையும் லபுசானே 31 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்களையும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி மீண்டும் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களை எடுத்தார். ஆஸி சுழற்பந்து வீச்சாளர் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 76 ரன்களை மட்டுமே இலக்காக கொண்டு ஆஸி அணி 18.5 ஓவர்களில் 78 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ட்ராவிஸ் ஹெட் 49 ரன்களையும் லபுசானே 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 

 

இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆஸி அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவை கட்டாயமாக வீழ்த்த வேண்டும். 4 ஆவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்வது அல்லது தோல்வி அடையும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு இந்திய முன்னேறுவதில் சந்தேகம் ஏற்படும். ஏனெனில் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

 

இந்திய அணியும் வெற்றி பெற்று இலங்கை அணியும் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் கூட புள்ளிப் பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏனெனில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி 123 புள்ளிகளுடன் 60.29 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை 63 புள்ளிகளுடன் 53.33 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. எனவே, நான்காவது டெஸ்ட் போட்டி, ஐசிசி இறுதி டெஸ்ட் போட்டியை தீர்மானிக்கும். எனவே, நாடெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 

Next Story

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; இரு பிரிவுகளில் முதலிடத்தில் இந்தியர்கள்

Published on 21/06/2023 | Edited on 23/06/2023

 

ICC Test Rankings; Indians topped both categories

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. 

 

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள்,  3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

 

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ருட் 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 883 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியில் ரிஷப் பண்ட் 758 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 729 புள்ளிகளுடன் 12வது இடத்திலும் விராட் கோலி 700 புள்ளிகளுடன் 14வது இடத்திலும் உள்ளனர்.

 

பந்துவீச்சில் இந்திய அணியின் அஷ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 829 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார். இந்திய அணியின் பும்ரா 772 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் ஜடேஜா 765 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.

 

ஆல்ரவுண்டர்களில் இந்தியாவின் ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அஷ்வின் 352 புள்ளிகளுடன் உள்ளார். அக்ஸர் படேல் 310 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.

 


 

Next Story

ரோஹித், விராட் அல்ல; இந்தியாவின் துருப்புச் சீட்டு இவரே; அறுதியிட்டு சொல்லும் பாண்டிங்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Rohit, not Virat; He is the trump card of India; An emphatic Ponting

 

16 ஆவது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி நேற்று ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது இதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்தார். மேலும் இந்த போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விராட் தனது பழைய ஆட்டத்திற்கு முழுதாக மாறியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

 

இந்த இறுதிப்போட்டி இந்தியாவின் டாப் ஆர்டருக்கும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்ற அவர் இந்திய அணியைக் குறித்தும் பேசினார். இந்திய அணி 1990களையும் 2000தையும் ஒப்பிடுகையில் வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியை இந்தியா உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். இந்திய அணி பும்ராவை இழக்கும் என்று கூறிய அவர் அந்த இழப்பை முகமது ஷமி ஈடு செய்வார் என்றும் கூறினார். 

 

மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர், கோலி ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். ஹைதராபாத் அணிக்காக அவர் சதமடித்ததை அனைவரும் கண்டனர். ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் எனக் கூறிய அவர் சுழலுக்கும் உதவலாம் என்றும் கூறினார். டாஸ் என்னவாக இருந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். ராகுலுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இஷான் கிஷான் இந்திய அணிக்கான துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.