India's 4th win after defeating Bangladesh at World Cup cricket

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

அந்த வகையில், மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நேற்று (19-10-23) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் பங்களதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்களை எடுத்திருந்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களையும், டான்ஷித் ஹசான் 51ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்களை இலக்காக பங்களாதேஷ் அணி நிர்ணயித்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் வீரரான பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும்,தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைம் எடுத்தனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து, 257 ரன்களை எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் விளையாடிய, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 48 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய சுப்மன் கில் 55 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 55 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின், விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 261 ரன்களை எடுத்துஅபார வெற்றி பெற்றது. பங்களாதேஷ்அணியை வீழ்த்தியதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்இந்திய அணி இரண்டவது இடத்தில்நீடிக்கிறது.