இந்திய அணி குழுவில் மேலும் ஒருவருக்கு கரோனா - பயிற்சியாளருடன் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு வீரர்கள்!

indian cricket team

நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து தொடருக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திய வீரர்கள் இங்கிலாந்தை சுற்றிப்பார்ப்பது, டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்களுக்கு கரோனா பரிசோதனையையும் நடத்தப்பட்டுவந்தது. இதில் இரண்டு வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் ஒருவர் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு வீரர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா பாதிப்பால் தனிமையில் உள்ள வீரர் ரிஷப் பந்த் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் இந்திய அணியின் உதவி பணியாளர்களில் ஒருவரான தயானந்த் கரணிக்கு கரோனா உறுதியாகியுள்ளதாகவும், இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த விருத்திமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும், பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருணும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

corona virus INDIA VS ENGLAND indian cricket team india
இதையும் படியுங்கள்
Subscribe