Skip to main content

இங்கிலாந்துக்கு மே 22-ம் தேதி புறப்படும் இந்திய அணியில் கேதர் ஜாதவ்...?

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், தனது இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவந்தார். தற்போது காயம் குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றுள்ளார்.

 

kedar jadhav


நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டது. அப்போது ஜடேஜா எரிந்த பந்தை கேதர் ஜாதவ் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.



ஆனால் தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்து அவர் முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி இந்த மாதம் 22-ம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்துள்ளதால் 22-ம் தேதி கிளம்பும் இந்திய அணியுடன் ஜாதவும் புறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Next Story

"சோகமான நாட்களில் ஒன்று" - ஜடேஜா ட்வீட்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

jadeja about worldcup 2019 semifinal loss

 

இன்றைய தேதி சோகமான நாட்களில் ஒன்றாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து. இந்த உலகக்கோப்பை தொடரில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா.

 

இந்நிலையில் இதனை நினைவுகூரும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜடேஜா, "வெற்றிபெற போராடினோம். ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டோம். சோகமான நாள்களில் ஒன்று" என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜா 77 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

"அந்த 2 இன்ச்கள் இடைவெளி"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது குறித்து முதன்முறையாக தோனி மனம் திறந்துள்ளார்.

 

dhoni about his run out in worldcup semifinal match

 

 

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்த தோனி, "என் முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். அதேபோல இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அப்போது "நான் ஏன் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்கக்கூடாது" என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொண்டேன். அந்த 2 இன்ச்கள் இடைவெளி... நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.