இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், தனது இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவந்தார். தற்போது காயம் குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்து அவர் முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி இந்த மாதம் 22-ம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்துள்ளதால் 22-ம் தேதி கிளம்பும் இந்திய அணியுடன் ஜாதவும் புறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.