இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Shami

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் டேராடூனில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த லாரியில் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. தலையில் ஏற்பட்ட காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ஷமி, நான்கு தையல்கள் போடப்பட்ட பின் தற்போது வீடுதிரும்பியுள்ளார். பெரிய காயங்கள் எதுவும் இல்லையென்றும், அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், சமீபகாலமாகஅவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி, பரபரப்பை கிளப்பி வருகிறார். இதனால், மிகுந்த மன உலைச்சலில் இருந்த ஷமி, வருகிற போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். அவர்மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர்மீது விசாரணை நடத்திய பிசிசிஐ, தற்போது அதிலிருந்து விடுவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.